×

மாநகராட்சி 3வது மண்டலத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

 

ஈரோடு, மே 4: ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குழாய் உடைந்ததால் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 31ல் பெருந்துறை பிரதான சாலையில் சாலை சீரமைப்பு பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. இப்பணியின் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து விடுவதால் குடிநீர் சப்ளை சரியாக வருவதில்லை.

குறிப்பாக, கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் முற்றிலும் இல்லாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஈரோடு வரி செலுத்துவோர் சங்க துணை செயலாளர் சக்திவேல் கூறியதாவது: பெருந்துறை சாலையானது விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகின்றது. இப்பணியின் போது மாநகராட்சி குடிநீர் குழாய்களை அடிக்கடி உடைத்து விடுகின்றனர். இதனால், 3வது மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருந்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக முற்றிலும் தண்ணீர் வரவே இல்லை. வேறு வழியின்றி லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநகராட்சி 3வது மண்டலத்தில் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Corporation 3rd zone ,Erode ,3rd Zone ,Erode Corporation ,Perundurai ,Ward No. 31 ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது